Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 18 செப்டம்பர், 2013

விபத்து

17/09/2013 துவரங்குறிச்சி: அரசு டவுன் பஸ்ஸூம், டாடா இண்டிகா காரும் மோதிக் கொண்ட விபத்தில், இருவர் பலியாகினர். இருவர் படுகாயம் அடைந்தனர். புதுக்கோட்டை மாவட்டம், முக்கண்ணாமலைப்பட்டியைச் சேர்ந்தவர் அக்பர் அலி, 53. இவரது தம்பி ஷேக் உஸ்மான், 35. அதே ஊரைச் சேர்ந்த இவரது உறவினர்கள் ரகுமான், 25, சையது பாவா, 22, ஆகியோர், நால்வரும், இண்டிகா காரில்,

17/09/2013 -நேற்று காலை மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர். சையது பாவா காரை ஓட்டினார். திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், துவரங்குறிச்சி அருகேயுள்ள யாகபுரம் அருகே கார் சென்று கொண்டிருந்த போது, துவரங்குறிச்சியிலிருந்து, மேலத்தானியம் சென்ற அரசு டவுன் பஸ், ரோடு டைவர்சனில் கடக்கும்போது, எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது. இதில் காரை ஓட்டி வந்த சையது பாவா, ரகுமான் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இடிபாடுகளில் சிக்கிய மற்ற, இருவரை, துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய மீட்புக்குழுவினர் வந்து மீட்டனர். விபத்தில் காயமடைந்த அக்பர் அலி, ஷேக் உஸ்மான் படுகாயமடைந்தனர். சையது பாவா மற்றும் ரகுமான் ஆகியோரது உடல் பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அக்பர் அலி, ஷேக் உஸ்மான் ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.