Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 4 ஜூன், 2015

நல்ல காலம்

இதுதான் நல்ல காலம்..!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~
2014இல் ஜம்மு- காஷ்மீரில் பெரு வெள்ளம் ஏற்பட்டுப்
பயிர்கள் நாசமாகின. விவசாயிகள் கடும் துன்பத்துக்கு ஆளாயினர்.
நிவாரணம் கோரி மனு அளித்த ஜம்முவிலுள்ள விவசாயிகளுக்கு
பிடிபி-பாஜக கூட்டணி அரசு “கணிசமான”
நிவாரணத் தொகை அளித்துள்ளது.
எவ்வளவு தெரியுமா? 47 ரூபாயிலிருந்து 278 ரூபாய் வரை.
விவசாயிகள் பலருக்கும் 94 ரூபாய்தான் கிடைத்துள்ளன.
30,000 ரூபாய் வரை பயிர்கள் நாசமான
விவசாயிக்குக் கிடைத்த நிவாரணத் தொகை
வெறும் 100 ரூபாய்க்கான காசோலை.
நொந்துபோன ஜம்மு விவசாயிகள்
பிடிபி- பாஜக அரசுக்கு எதிராகப் பெரிய அளவில்
போராடத் தயாராகி வருகின்றனர்.
“நல்ல காலம் வந்துவிட்டது” என்று மோடி பாட்டுக்கு
பேட்டிக்கு மேல் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
எப்படிப்பட்ட ‘நல்ல காலம்‘ என்பதற்கு
இந்தக் காசோலைகளே சாட்சி.
-சிராஜுல்ஹஸன்
Siraj Ul Hasan's photo.