Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

ரேடியோ சலாம் 106.5 -

துபாயில் இரண்டு தமிழ் ரேடியோ நிலையங்கள் உள்ளன, அதில் ஒன்று ரேடியோ சலாம் 106.5 - இது தினத்தந்தி நிறுவனத்தால் ஒலிபரப்பபடுகிறது.
இவர்கள் பிஜேபி யின் ஊதுகுழலாகவே மாறிவிட்டார்கள் என்றே கூறவேண்டும். மோடி அமீரகம் வந்துள்ளார் - பாரதபிரதமர் ஒருவர் பல வருடங்களுக்கு பிறகு அமீரகம் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்க செய்திதான் அதில் மாற்றுகருத்து இல்லை. ஆனால், 17.08.2015 அன்று, துபாயில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எப்படியாவது ஐம்பதாயிரம் பேர்களை கூட்டிவிடவேண்டும் என்பதில் இவர்கள் காட்டும் அக்கரைதான் இவர்களின் நடுநிலமையின் மீது சந்தேகம் கொள்ள வைக்கிறது.
மோடி மூக்கால் மூச்சுவிட போகிரார், காலால் நடக்க போகிறார், வாயால் பேச போகிறார் ....என்ற ரீதியில் இவர்களின் அலப்பரை தாங்க இயலவில்லை.
துபாய் கிரிக்கெட் ஸ்டேடியத்தின் கொள்ளலவு சுமார் 30000 இருக்கைகள்தான், ஆனால், இவர்கள் ஐம்தாயிரம் பேர்களை அங்கே கூட்டி செல்ல முனைப்பு காட்டுவதுதான் வேடிக்கை. பாக்கி 20 ஆயிரம் பேரை என்ன செய்வீர்கள் என்றால், ஸ்டேடியத்தின் இரண்டுவாசல்களிலும், தலா பத்தாயிரம் பேர்கள் மிகப்பெரிய டிவியில் காணவைப்போம் என்று காரணத்தை சொல்லி நேர்த்தோடு செல்லுங்கள் என்ற கூக்குரல் பலமாக உள்ளது.
இதன் ரேடியோ வர்ணணை யாளர் மிஸ்.ரேவா அவர்களோ, மோடியை ஆஹா ஒஹோ என்று புகழ்வதில் முதலிடத்தில் உள்ளார்.
இவருக்கு ஒரு வேண்டுகோள்!
ஐம்பதாயிரத்திற்கும் குறைவாக கூட்டம் வந்தால் எவ்வளவு கூடினார்கள் என்றா கணக்கை நீங்கள் உங்கள் ரேடியோவில் கூறவேண்டும் - அப்படி கூறினால் மட்டுமே நீங்கள் ஒரு நடுநிலையான செய்தியாளர் என்பதை ஏற்றுகொள்ள இயலும்.
தமிழ்ரேடியோ 89.4 என்ற வேறொரு தமிழ் ரேடியோ நிலையம் தொடங்கியபின்பு ..இவர்களின் ரேட்டிங் பலமாக அடிவிழுந்து இருக்கிறது. அதனை மாற்ற ஒரு தவரான பாதையை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பதுதான் இந்த பதிவின் நோக்கம்.