Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 25 அக்டோபர், 2015

தேசபக்தி !!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இந்தியா பாகிஸ்தான் கிரிக்கட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை கிரிக்கட் அலுவலகத்தை முற்றிகையிட்ட சிவசேனா கட்சினர்----செய்தி
1. தன்னுடைய பதவியேற்பு விழாவுக்கு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீபை அழைத்து வந்தாரே மோடி, அப்போது இவர்களுக்கு தேசபக்தி பொங்கி, பிரதமர் அலுவலகத்தை முற்றுகையிடவில்லையே ஏன்?
2. பாகிஸ்தானில் இருந்து லாரி லாரியாக வெங்காயத்தை இறக்குமதி செய்தபோது இவர்களுக்கு தேசபக்தி பொங்கி, வெளியுறவு அமைச்சகத்தை முற்றுகையிடவில்லையே ஏன்?
3. இன்றும் பாகிஸ்தானுடன் அமைதி பேச்சவார்த்தைக்கு மோடி அரசாங்கம் முயற்சித்து வருகிறதே, இப்போது இவர்களுக்கு தேசபக்தி பொங்கி வலிந்து மோடி மீது கருப்பு மையை வீசாமல் இருக்கிறார்களே ஏன்?
4. இந்தியாவினால் தேடப்படும் குற்றவாளியான ஹபீஸ் சயீதை பாகிஸ்தானுக்கே சென்று சந்தித்து கொஞ்சி குழாவி பிரியாணி தின்று விட்டு வந்தாரே rss அமைப்பை சார்ந்த வேத பிரதாப் வைதிக். அப்போது இவர்களுக்கு தேசபக்தி பொங்கி rss அலுவகத்தை முற்றுகையிடவில்லையே ஏன்?
5. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்துக்கே சென்று பிரியாணி சாப்பிட்டு பாகிஸ்தானின் தேசிய தினத்தை கொண்டாடினாரே சு. சாமி அப்போது இவர்களுக்கு தேசபக்தி பொங்கி சு, சாமி மீது பெய்ண்டை ஊற்றவில்லையே ஏன்?
காவிகளின் போலி தேசபக்தியை அப்பாவி இந்து மக்கள் விளங்கி கொள்ள வேண்டும்.
இதை மாற்றுமத சகோதர்ர்களுள்ள பகிருங்கள்