Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 2 அக்டோபர், 2015

தேர்தலுக்கு- பஞ்சாயத்துகள் கூடிப்பேசி துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தபட்டவையே-கலவரங்கள்

செய்தி 2:
உ.பி.,யின் தாத்ரி என்ற இடத்தில், பசுவின் இறைச்சியை சாப்பிட்டதாக கூறி, வன்முறை கும்பலால், முகமது அக்லாக், 50, என்பவர் அடித்து கொல்லப்பட்ட விவகாரத்தில், அறிக்கை அளிக்குமாறு, அகிலேஷ் யாதவ் அரசுக்கு உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் தகுந்தநடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.
செய்தி1:
உபியில் மாட்டிறைச்சி சாப்பிட்டார் என்ற வதந்தியைக் கிளப்பி ஒருவரை அடித்துக் கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட ஆறு பேரை விடுவிக்க உ.பி அரசுக்கு அம்மாநில பாசக கெடு விதித்துள்ளது. இல்லாவிட்டால் கிராம மகாபஞ்சாயத்துகளைக் கூட்டி மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
(2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், இது போன்ற பஞ்சாயத்துகள் கூடிப்பேசி துல்லியமாக திட்டமிடப்பட்டு நடத்தபட்டவையே முசாபர் கலவரங்கள் என்பதையும் உ.பியில் மொத்தமுள்ள 80ல் 71 தொகுதியில் பாசக வெற்றி பெற்றதையும் நினைவு கூர்க.
மேலும் 2017ல் உ.பியில் சட்டசபைத் தேர்தல் வருகிறது என்பதையும் கவனத்தில் கொள்க).
கருத்துப்படம்: யோகு யோகேந்திரன்