Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 24 டிசம்பர், 2015

வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்கள்-புதிய சுங்க விதி அறிவிப்பு !

வெளிநாட்டில் இருந்து வரும் இந்தியர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் கொண்டுவந்தால்..அதை அறிவிப்பு படிவம் மூலம் தெரிவிக்க வேண்டும்...புதிய சுங்க விதி அறிவிப்பு !
ஏழை வயிற்றில் அடித்து..லஞ்சம் லாவண்யம், வரி ஏய்ப்பின் மூலம் கோடி கோடியா சொத்து குவித்து வைத்திருக்கும் அரசியல்வாதிகள்..கார்ப்பரேட் பண முதலைகளை கேட்க துப்பில்லாத மத்திய அரசு...அவர்களுக்கு எதிரான ஒரு மசோதாவை நிறைவேற்ற முடியாத..கையாலாகாத மத்திய அரசு...
ரத்தத்தை வேர்வையாக சிந்தி..இரண்டு வேலை சாப்பிடாமல்..ஒரு வேலை காய்ந்த குபுஸ் ரொட்டி சாப்பிட்டு..உறவுகளை இழந்து..இளமைகளை தொலைத்து வாடி வதங்கிய பயிராய் வரும்..எங்களிடம் தான்..வீரத்தை காட்டும் மத்திய அரசு உருப்படுமா நாடு....?
Mohamed Fazal Akbar's photo.