Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 31 மார்ச், 2016

சர்க்கரை நோயை உணவு மூலம் சரிசெய்யலாம் !!!


நெல்லிக்காய் பெரியது (காட்டு நெல்லி அல்லது முழு நெல்லிக்காய் என்றும் சொல்லப்படும்) துவர்ப்பு சுவை கொண்டது இரண்டு எடுத்துக் கொள்ளவும், கத்திக்கொண்டு சிறுதுண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். கறிவேப்பில்லை பத்திலிருந்து பதினைந்து இலை கழுவி அதோடு சேர்க்கவும். இவை இரண்டையும் மிக்ஸ்யில் போட்டு ஒரு டம்ளர் குடிநீர் சேர்த்து அரைக்கவும்.
தேநீர் வடிகட்டியால் வடிகட்டவும். இத்துடன் பத்து சொட்டுகள் எலுமிச்சை சாறு விடவும். ஒரு கரண்டி (பத்து மில்லி ) தேன் சேர்த்து கலக்கவும். காலை உணவுக்கு 1 மணி நேரத்திற்கு முன் மெதுவாய் சப்பி சப்பி அருந்தவும். சாப்பிட ஆரம்பிபதற்கு முன் சர்க்கரை அளவை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள். ஒரு மாதம் கழித்து திரும்பவும் சர்க்கரை அளவை சோதிக்கவும். நிச்சயம் குறையும். உணவுதான் எனவே பயமின்றி தொடர்ந்து பயன் படுத்தலாம்