Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 21 மே, 2016

வரலாறு காணாத வெப்பம் பதிவான கிராமம்

நாட்டிலேய இதுவரை இல்லாத அளவு வெப்பநிலை தற்போது வடமேற்கு மாநிலத்தில் உள்ள கிராமத்தில் பதிவாகியுள்ளது.
வடமேற்கு மாநிலமான ராஜஸ்தானின், பட்சட்ரா என்னும் கிராமத்தில் இருந்து 125 மைல் தொலைவில் உள்ளது பலோடி. இக்கிராமத்தில் நாட்டிலேயே இதுவரை பதிவாகாத அளவுக்கு அதிகபடியான வெப்பநிலை பதிவாகியுள்ளது. இன்று மதியம் வரை, 51 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதாவது 123.8 டிகிரி பாரன்கிட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன் கடந்த 1886-ஆம் ஆண்டு தான், அதிகப்பட்ச வெப்பநிலை பதிவாகியிருந்தது. அதுவும் 50.6 டிகி ரி செல்சியஸ் தான்.
வடமேற்கு மாநிலங்களில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகப்படியான வெப்பநிலை பதிவாவது வழக்கமான ஒன்றாக இருந்தாலும் இந்தாண்டு வழக்கத்தை விட அதிகமான வெப்பம் பதிவாகி வருகிறது.
கடந்த 4 வாரங்களில், அதிகப்படியான வெப்பம் மற்றும் அதுசார்ந்த பாதிப்பால் கிட்டத்தட்ட 100 மக்கள் உயிரிழந்துள்ளனர்