Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 8 செப்டம்பர், 2016

19 ஆண்டுகளாகியும் இவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை..

சமுதாயமே.!
இவர்களை தெரிந்து கொள்ளுங்கள்..
ஓடி....ஆடி நண்பர்களுடன் குதூகலித்து திரியும் அரும்பு மீசை முளைத்த சமயம் சிறைச்சாலைக்கு சென்ற இவர்கள் இன்னும் வீடு திரும்பவில்லை...
இவர்களில் பெரும்பாலானோர் அப்பாவிகள்.....
சந்தர்ப சூழ்நிலையால் குற்றவாளிகளாக ஆக்கப்பட்டவர்கள்
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு ஏன் வாதிடுகிறோம்
கேளுங்கள்....
இவர்களுக்கு பின்னர் சிறைக்கு வந்து குற்றம் நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் 7 ஆண்டுகளில் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்
19 ஆண்டுகளாகியும் இவர்கள் ஏன் விடுவிக்கப்படவில்லை..
காரணம் இவர்கள் முஸ்லிம்கள்...
கடந்த காலங்களில் முஸ்லிம் சமூகத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை பொறுத்துக்கொள்ள முடியாமல் குரல் கொடுத்தவர்கள்
தமிழகத்தில் சுமார் 80 லட்சம் முஸ்லிம்களில் இவர்களை அறிந்திராதவர்கள் அறிந்து கொள்ளுங்கள்
இவர்கள் விடுதலைக்காக உங்களால் முடிந்த வழியில் பங்கெடுங்கள்