Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 1 ஜனவரி, 2017

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சோகம்... விபத்துகளில் 6 பேர் உயிரிழப்பு

சென்னை அருகே கிழக்கு கடற்கரை சாலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போ‌து நிகழ்ந்த விபத்துகளில் 6 பேர் உயிரிழந்தனர். 12 பேர் காயமடைந்தனர்.
மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் இரு சக்கர வாகனமும் வேனும் மோதிக் கொண்டதில் ‌‌இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழந்தனர். ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டிணத்தில் சைக்கிளும் இருச்சகர வாகனமும் மோதிக் கொண்டதில், சைக்கிளில் பயணம் செய்தவர் உயிரிழந்தார்.
கல்பாக்கம் அடுத்த கூவத்தூரில் அரசுப் பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில், காரில்‌ பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார். மாமல்லபுரம் அடுத்த வடநெம்மேலியில், புதுவையில் இருந்து சென்னை நோக்கி வந்த கார் தடுப்புச்சுவரில் மோதியதில் அதில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர்.