Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 2 ஜனவரி, 2017

ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன்.. பிலிப்பைன்ஸ் அதிபர் ஆவேசம்

Prez l

ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் இருந்து வீசி எறிவேன் என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடெர்டோ எச்சரித்துள்ளார்.
புயலால் பாதிக்கப்பட்டுள்ள கமரைன்ஸ் சர் மாகாணத்தை பார்வையிட்ட பிறகு ரோட்ரிகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஊழல் அதிகாரிகளை ஹெலிகாப்டரில் அழைத்து சென்று வானில் இருந்து வீசிவிடுவேன் என்று எச்சரித்தார். இதற்கு முன்பு தான் மேயராக‌ பதவி வகித்த போது பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட நபரை ஹெலிகாப்டரில் இருந்தி வீசி எறிந்ததாகவும் அவர் கூறினார்.
போதை மருந்து பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை அதிபர் ரோட்ரிகோ எடுத்து வருகிறார். இவர் அதிபாரகப் பதவி ஏற்ற மே மாதத்தில் இருந்து இப்போது வரையில் போதை மருந்து பயன்படுத்துவோர் மற்றும் பரப்புவோர் என ஆறாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பிலிப்பைன்சில் போதை மருந்து முற்றிலும் ஒழிக்கப்படும் வரை இந்த கடுமையான நடவடிக்கை தொடரும் எனவும் ரோட்ரிகோ கூறியுள்ளார்.