Pages - Menu
(இதற்கு நகர்த்து ...)
▼
Pages - Menu
(இதற்கு நகர்த்து ...)
முகப்பு
▼
Menu
(இதற்கு நகர்த்து ...)
இந்தியாவின் இரண்டாம் சுதந்திரப்போராட்டம்
தவறாக புரிய படும் இஸ்லாம்
கல்வி
இஸ்லாம்
தொழுகை நேரம்
மவுத்து ( உள்ளூர் இறப்பு ) அறிவிப்பு
அறுசுவை உணவு
சட்டம்
இயற்கை மருத்துவம்
சிறுதொழில்
இஸ்லாம் அறிவோம் (பிறமத மக்களுக்காக)
மறைக்கப்படும் முஸ்லிம்களின் தியாகம் இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு,
இந்திய இஸ்லாமியர்கள் நிலை
ரூபாய் மதிப்பு
வீடியோ
வைரஸ் தொற்று
சமூக அரசியல் பார்வை
இணையவாசிகளின் குரல்
போர்
அரசியல்
சுற்றுசூழல்
மீட்புப் பணி
ஜுமுஆ உரை
தேர்தல்
ஆர்ப்பாட்டம்
சிறப்பு நிகழ்ச்சிகள்
முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்
▼
செவ்வாய், 31 ஜனவரி, 2017
நாட்டு மாடுகளை காக்கும் இளைஞர்கள்
நாட்டு மாடுகளை பாதுகாக்கும் புதிய முயற்சியில் திருச்சியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ஈடுபட்டுள்ளனர்.
திருச்சி மணிகண்டம் அருகே உள்ள கோலார்பட்டியை சேர்ந்த மதன் மற்றும் ஆனந்தன் ஆகியோர், 15 ஏக்கர் பரப்பளவில் இயற்கை முறையில் விவசாயம் மேற்கொண்டு வருகிறார்கள். விவசாயத்தில் முக்கிய பங்கு வகிக்கும் நாட்டு மாடுகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து, இவர்கள், கடந்த 6 மாதங்களாக நாட்டு மாடு வகைகளை பாதுகாக்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்.
பால் விற்பனையும், இயற்கை உர தயாரிப்பும்
“நலம் நாட்டுப்பசும்பால் மையம்” என்ற பெயரில் விவசாய நிலங்களுக்கு நடுவே பண்ணை அமைத்து சுமார் 100 மாடுகளை இவர்கள் பராமரித்து வருகிறார்கள். தமிழகத்தில் இருந்த மொத்தம் 30 வகை நாட்டு மாடுகளில் 15 வகைகள் அழிந்து விட்டன. அதில் தற்போது உள்ள ஆலம்பாடி, உம்பலச்சேரி, மயிலை வகைகளை இவர்கள் வளர்த்து வருகின்றனர். இதில் கிடைக்கும் பாலில் சிறு துளி தண்ணீர் கலக்காமல் ஏறத்தாழ 60 வீடுகளுக்கு விநியோகம் செய்து வருகின்றனர். ஒரு லிட்டர் பால் 110 ரூபாய்க்கு விற்பனை செய்கிறார்கள்.
இவர்கள் ஜெர்சி இன மாட்டு பால் தீமைகளை எடுத்துரைத்தும் ,நாட்டு மாட்டுப்பால் முக்கியத்துவத்தையும் இணைய தளம் வாயிலாக வலியுறுத்துகின்றனர். லாபம் என்பதை விட, மக்களுக்கு நாட்டு மாட்டு பாலின் பலன்கள் கிடைக்க வேண்டும் என்ற கொள்கையுடன் பயணத்தை தொடர்கின்றனர் இரு சகோதரர்களும்.
பதிவு செய்த நாள் : January 2
‹
›
முகப்பு
வலையில் காட்டு