Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 2 பிப்ரவரி, 2017

மதுரை கீழடியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் - மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் கோரிக்கை

மதுரை கீழடியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் - மாநிலங்களவையில் தமிழக எம்பிக்கள் கோரிக்கை

மதுரை அருகே கீழடியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என, நாடாளுமன்றத்தில் தமிழக எம்பிக்கள் வலியுறுத்தினர்.

மாநிலங்களவை கூடியதும் இது தொடர்பாக மாநிலங்களவையில் மார்க்சிஸ்ட் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் கீழடியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார். டி.கே.ரங்கராஜன் முன்வைத்த கோரிக்கைக்கு திமுக உறுப்பினர் கனிமொழி, பாஜக உறுப்பினர் இல.கணேசன் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்தனர்.

இதனை அடுத்து எம்பிக்கள் வைத்த கோரிக்கை தொடர்பாக, சம்பந்தப்பட்ட கலாச்சார அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.