Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 24 ஜூன், 2017

குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்கும் முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிமுகவுக்கு திருமாவளவன் கோரிக்கை!


பாரதிய ஜனதா கட்சியின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்கும் முடிவை அதிமுக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார். 

புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மே 17 இயக்கத்தைச் சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட 4 பேரை சிறைக்குச் சென்று சந்தித்த திருமாவளவன், பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ராம்நாத் கோவிந்த்தை ஆதரிக்கும் விவகாரத்தில், அதிமுகவின் இரு அணிகளும், பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

அதிமுகவினர் மாறிமாறி பாஜகவின் குடியரசு தலைவர் வேட்பாளரை ஆதரிப்பது, பாஜகவின் கட்டுப்பாட்டில் அதிமுக உள்ளதையேக் காட்டுவதாகவும் குற்றம்சாட்டினார். முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி கர்ணணை விசாரணையின்றி கைது செய்தது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானது எனவும் திருமாவளவன் தெரிவித்தார்.