Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 30 ஜூன், 2017

ஆசிரியரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை! June 29, 2017

ஆசிரியரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை!
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே பள்ளி குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின் பேரில் ஆசிரியரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

அவிநாசியை அடுத்த அ.குரும்பபாளையம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நான்காம் வகுப்பு ஆசிரியராக அவிநாசியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பணியாற்றிவருகிறார். இவர் தனது வகுப்புகளின் போது,  பெண் குழந்தைகளிடம் வரம்பு மீறி பாலியல் தீண்டுதல் மற்றும் பாலியல் தொல்லைகள் கொடுத்துவந்துள்ளதாக கூறப்படுகிறது.  

இதுகுறித்து விபரம் அறிந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் இன்று பள்ளியை முற்றுகையிட்டு ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த சேயூர் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து, ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.  அரசு பள்ளி ஆசிரியர் பெண் குழந்தைகளிடம் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.