Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 2 ஜூலை, 2017

சிவப்பாக மாறிய சாதம் July 02, 2017

சிவப்பாக மாறிய சாதம்


தேனி அருகே சமைத்த சாதம் சிவப்பு நிறமாக மாறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கொடுவிலார்பட்டியில் பூங்கோடி என்பவர், அரசி கடை ஒன்றில், 25 கிலோ அரிசி மூட்டை வாங்கியுள்ளார். அதை அவர்கள் சமைத்து வந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு சமைத்த சாதம் மீதம் இருந்துள்ளது. அந்த சாதத்தை பார்த்தபோது, சாதம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது. அவர் சமைத்த சாதம் மூன்று நாட்களுக்கு பிறகு தொடர்ந்து சிவப்பு நிறமாக மாறி வருவது வாடிக்கையாக இருந்துள்ளது. இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் , சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் சாதம் மற்றும் அரிசி மாதிரியை பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.