Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 18 செப்டம்பர், 2017

கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் 18 பேரையும் நீக்க முடியாது - முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்! September 18, 2017

கட்சித்தாவல் சட்டத்தின் கீழ் 18 பேரையும் நீக்க முடியாது - முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன்!


தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே இல்லாத அதிரடியான நடவடிக்கையாக 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கட்சித்தாவல் தடை சட்டத்தின் அடிப்படையில் இந்த 18 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நியூஸ் 7 தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், “ கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் இந்த 18 பேரையும் நீக்க முடியாது. ஏனென்றால், அவர்கள் வேறு எந்தக்கட்சியிலும் சேரவில்லை. மேலும், சட்டமன்றத்திற்குள் மட்டுமே கொறாடாவிற்கு உத்திரவிட அதிகாரம் கிடையாது. இது தவறான நடவடிக்கை” என்று குறிப்பிட்டார்.