Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 27 செப்டம்பர், 2017

சீமைக்குப் போயிருந்த மேகமெல்லாம் திரும்புதையா! September 26, 2017

சீமைக்குப் போயிருந்த மேகமெல்லாம் திரும்புதையா!


அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

நேற்று பிற்பகலில் வங்கக்கடலில் நிலைக்கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வுநிலை, மேற்கு திசையில் நகர்ந்து, தற்போது ஆந்திராவை ஒட்டிய பகுதியில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாக நிலைகொண்டுள்ளது என்றும், இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் வடதமிழகத்தின் உள்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் வட மற்றும் தென் தமிழகத்தின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை மற்றும் இரவு நேரங்களில லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மயிலாடுதுறையில் 9 செ.மீ மழையும், ஜெயங்கொண்டம் விருதாச்சலம் மற்றும் பண்ரூட்டியில் 7 செமீ மழையும் பதிவாகியுள்ளது