Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 25 அக்டோபர், 2017

எம்.எல்.ஏவை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு! October 25, 2017


எம்.எல்.ஏவை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு!

கோவை கிணத்துக்கடவு தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினரை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு நிலவியது.

கோவை கிணத்துக்கடவு தொகுதிக்கு உட்பட்ட போத்தனூர், சுந்திரபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அத்தொகுதி அதிமுக எம்.எல்.ஏ.வான எட்டிமடை சண்முகத்தை காணவில்லை என போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அதில், ஊரெங்கும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் மாநகராட்சியின் புதிய வரி சீராய்வு உள்ளிட்ட பிரச்சனை தொடர்பாக மக்கள் அவதிப்படுகின்றனர். 

இது தொடர்பாக மாநகராட்சியிடம் கேள்வி கேட்க வேண்டிய எம்.எல்.ஏ.வை பல மாதங்களாக தொகுதியில் காணவில்லை எனவும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. மேலும், எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகத்தை ஊரெல்லாம் தேடும் பொதுமக்கள் என்னும் வார்த்தைகள் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.