Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 28 அக்டோபர், 2017

கொள்ளுப் பேரன் திருமணத்தை நடத்தி வைக்கிறார் கருணாநிதி! October 28, 2017


கொள்ளுப் பேரன் திருமணத்தை நடத்தி வைக்கிறார் கருணாநிதி!

தனது கொள்ளுப்பேரனின் திருமணத்தை திமுக தலைவர் கருணாநிதி, சென்னையில் அடுத்த வாரம் நடத்தி வைக்கிறார். 

கருணாநிதியின் மகன் மு.க.முத்து - சிவகாம சுந்தரி தம்பதியரின் மகள் வழி பேரனான மனு ரஞ்சித்துக்கும், நடிகர் விக்ரமின் மகளான அக்ஷிதாவிற்கும் கடந்த ஜூலை 10ம் தேதி திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.  இவர்களின் திருமணம் அடுத்தவாரம் சென்னை கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்தில் நடைபெற உள்ளது. 

இத்திருமணத்தை கருணாநிதியும் அவரது மனைவி தயாளு அம்மாளும் நடத்தி வைக்க உள்ளனர். உடல் நலக் குறைவு காரணமாக தொடர் ஓய்வில் இருந்து வந்த கருணாநிதி, தற்போது குணமடைந்து வருகிறார். பல மாதங்களாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தவிர்த்து வந்த கருணாநிதி,  தனது கொள்ளுப் பேரனின் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.