Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 24 நவம்பர், 2017

டிசம்பர் 15ம் தேதி குளிர்காலக் கூட்டத்தொடர் தொடக்கம்..! November 24, 2017

Image

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி ஐந்தாம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் வழக்கமாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும். இந்த ஆண்டு குளிர்காலக் கூட்டத்தொடர் பற்றிய அறிவிப்பு தாமதமாகிக்கொண்டே வந்தது. இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலால் கூட்டத் தொடர் தாமதம் எனக் கூறப்பட்டது. 

இந்நிலையில் டெல்லியில் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் பேசிய நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சர் அனந்தகுமார், செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி 5ஆம் தேதி வரை நடைபெறும் எனத் தெரிவித்தார். 

இதில் விடுமுறை நாட்கள் தவிர 14நாட்கள் அவை கூடும் என்றும் அவர் குறிப்பிட்டார். கூட்டத்தொரைப் பயனுள்ளதாகவும் வெற்றிகரமாகவும் நடத்த அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 14நாட்களும் அவைக்கு வந்து அவை நடவடிக்கைகளில் பங்கேற்க வேண்டும் என்றும் அமைச்சர் அனந்தகுமார் கேட்டுக்கொண்டார்.