அரசாங்கமே திருடுவது குற்றம் தான் - கமல்ஹாசன் November 19, 2017
குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ள அவர், ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான் என குறிப்பிட்டுள்ளார்.
குற்றத்தைக் கண்டுபிடித்தபின் அதை நிரூபிக்காமல் போவதும் குற்றம்தானே என கூறியுள்ள கமல்ஹாசன், ஆராய்ச்சி மணி அடித்தாயிற்று என்றும், குற்றவாளிகள் நாடாளக்கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மக்களும் அவரால் ஆய குடியரசும் செயல்பட்டே ஆகவேண்டும் என தெரிவித்துள்ள கமல்ஹாசன், மக்களே நடுவராக வேண்டும் என்றும், விழித்தெழுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். source ns7tv