மாணவிகளை தன்னுடைய வயலில் வேலைபார்க்க வைத்த ஆசிரியர்! November 25, 2017
ஒடிசா மாநிலம் தாக்கூரு முண்டா பகுதியில் ஆசிரியை ஒருவர் பள்ளி மாணவிகளை தனது வயலில் வேலைக்கு அனுப்பியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தக்ருமுண்டாவில் செயல்பட்டு வந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் அங்கு பயின்று வரும் 3 மாணவிகளை தனது வயலில் வேலை செய்ய கட்டாயப்படுத்தியுள்ளார்.
வயல் வேலைக்கு செல்ல மாணவிகள் மறுத்ததால் அவர்களை ஆசிரியை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர், அந்த 3 மாணவிகளையும் கட்டாயப்படுத்தி, வயல் வேலைக்கு அவர் அனுப்பியுள்ளார்.
இதற்காக, நாள் ஒன்றுக்கு 100 ரூபாய் வீதம் 3 நாட்களுக்கு தலா 300 ரூபாய் ஊதியத்தையும் ஆசிரியை அளித்ததாக கூறப்படுகிறது. மாணவியின் பெற்றோர்கள் அளித்த புகாரை ஏற்று காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.