Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 4 நவம்பர், 2017

கஞ்சா விற்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்! November 4, 2017

Image

கோவையில் அரசு பள்ளி அருகே கஞ்சா விற்ற இளைஞருக்கு தர்ம அடி கொடுத்து காவல்துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை அசோகபுரம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த நிகல் என்ற இளைஞர், மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பின்னர் அவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் பல இடங்களில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சியில் கள ஆய்வுடன் செய்தி ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.