Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 2 டிசம்பர், 2017

ஓகி புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 10 ஆக அதிகரிப்பு..! December 2, 2017

Image

ஓகி புயலுக்கு கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் இதுவரை மூன்று மீனவர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த இரண்டு நாட்களாக ஓகி புயலால், கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. சாலைகளில் நூற்றுக்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்ததால், போக்குவரத்து மற்றும் மின்சாரம்  தடைப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இப்புயலால் வீடுகள் இடிந்து விழுந்தது 7 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் துறைமுகத்தில் இருந்து சென்ற நாட்டுப்படகு ஒன்று கடலில் கவிழ்ந்து  விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியானது. 

இச்சம்பவத்தில் மூன்று மீனவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டும் பலியானோர் எண்ணிக்கை 10-ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே தேங்காய்பட்டினம், முட்டம் பகுதி மீனவர்கள் சுமார் 183 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நிலையில், அவர்கள் கரை திரும்பவில்லை என தெற்காசிய மீனவ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனால் கரை திரும்பாத மீனவர்களின் உறவினர்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது.