Pages - Menu

Pages - Menu

Menu

வெள்ளி, 15 டிசம்பர், 2017

​குஜராத் தேர்தலில் மின்னணு வாக்கு எந்திர கோளாறு தொடர்பாக அதிக அளவிலான புகார்கள்! December 15, 2017

Image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் பழுது தொடர்பாகவே அதிக அளவு புகார்கள் வந்துள்ளதாக குஜராத் தலைமை தேர்தல் அதிகாரி பி.பி.ஸ்வைன் தெரிவித்துள்ளார். 

தேர்தல் வாக்குப் பதிவு தொடர்பாக வந்துள்ள மொத்த புகார்களில் 50 சதவீதத்திற்கும் மேலானவை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பானவை என குறிப்பிட்ட அவர், பழுதடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் உடனுக்குடன் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

பழுதடைந்த அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தலைமை தேர்தல் அதிகாரி  பி.பி.ஸ்வைன் கூறினார்.