Pages - Menu

Pages - Menu

Menu

ஞாயிறு, 3 டிசம்பர், 2017

தொடர் கனமழையால் புதிதாய் உருவான அருவிகள்! December 3, 2017

Image

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் கனமழையின் காரணமாக புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

தொடர் மழையால் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள குளம், குட்டைகள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. கடம்பூர், மல்லியம்மன் துர்க்கம், குன்றி, மாக்கம்பாளையம், அருகியம், கூத்தம்பாளையம், இருட்டிபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் சில வாரங்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. 
சிற்றோடைகள் மற்றும் பள்ளங்களில் ஓடும் நீர் பாறைகளின் வழியாக 10-க்கும் மேற்பட்ட இடங்களில் அருவியாக கொட்டுகிறது. கே.என்.பாளையத்தில் இருந்து கடம்பூர் செல்லும் மலைப் பாதையில் இந்த அருவிகள் தோன்றியதால் மலைப்பாதையில் பயணிப்பவர்கள் அருவிகளில் வழியும் நீரை நின்று ரசித்தபடி செல்கின்றனர்.