இடுகாட்டிற்கு செல்ல வழியில்லாமல் 1 1/2 கிலோ மீட்டர் சுற்றிச் செல்லும் அவலம்! February 14, 2018
களக்காடு அருகே இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாக சடலங்களை கொண்டு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
உதயமார்த்தாண்டபேரியில் இருந்து சாலைப்புதூர் குளக்கரையில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது. இதனால் கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை விளைநிலங்கள் வழியாக ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்கு தூக்கி செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இந்த விவகாரத்தில் அதிகாரிகள் தலையிட்டு இடுகாட்டிற்கு பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.