இலங்கை அரசுக்கு எதிராக தமிழக மீனவர்கள் 2 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம்! February 15, 2018
இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தை வாபஸ் பெற கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் 2வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள 136 மீனவர்களையும், 179 படகுககளையும் விடுதலை செய்ய வேண்டும், இலங்கை அரசால் நிறைவேற்றப்பட்ட புதிய சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், இதனால் இராமேஸ்வரம் மீன்பிடித்துறைமுகத்தில் 800க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு செல்லாமல் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இதே கோரிக்கையை வலியுறுத்தி வரும் 16ம் தேதி பாம்பன் பாலத்தில் போராட்டம் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.