பக்கோடா தொழில் செய்ய கடன் கேட்டு மத்திய அமைச்சருக்கு கடிதம் February 15, 2018
பக்கோடா தொழில் செய்ய கடன் கேட்டு மத்திய அமைச்சருக்கு உத்தரபிரதேச இளைஞர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார்.
லக்னோவை சேர்ந்த அஸ்வின் மிஸ்ரா என்ற இளைஞர், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
பகோடா விற்பனை செய்வது நல்லது என பிரதமர் மோடியின் பேச்சு மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவரது அறிவுரைப்படி பக்கோடா கடை திறக்க முடிவு செய்துள்ளதாவும் கடிதத்தில் இளைஞர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் பக்கோடா கடை வைப்பதற்காக வங்கிகள் கடனுதவி மறுத்துவிட்டதால், பிரதமரின் நிதியில் இருந்து தனக்கு பணம்கொடுத்து உதவுமாறு ஸ்மிருத்தி இரானியிடம் அந்த இளைஞர் வலியுறுத்தியுள்ளார்.