Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 27 பிப்ரவரி, 2018

குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் முல்லைப்பெரியாறு தண்ணீர் திருடப்பட்டு விற்பனை? February 27, 2018

Image

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறந்துவிடப்படும் தண்ணீர் திருடப்படுவதாக புகார் எழுந்துள்ளது. 

தேனி மாவட்டத்தில் கம்பம், கூடலூர், உத்தமபாளையம், சின்னமனூர் ஆகிய நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்குத் தேவையான குடிநீர் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறக்கப்படும். 

முல்லைப் பெரியாறு அணையின் கரையோரப் பகுதிகளில் நிலம் வைத்திருப்பவர்கள் மின் மோட்டார்கள் மூலமும், ஊற்றுக்கள் மூலமும், தண்ணீரை திருடி விற்பதாக புகார் எழுந்துள்ளது. 

இதனைத் தடுக்க முல்லைப் பெரியாற்றின் கரையோர வயல்களில் கிணறு அமைக்க தடை விதிக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.