Pages - Menu

Pages - Menu

Menu

வியாழன், 1 மார்ச், 2018

பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தலைமை ஆசிரியர்! March 1, 2018

Image

சென்னையில் 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியரைக் கைது செய்யக்கோரிப் பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

சென்னை பெருங்குடி அருகே உள்ள தொலைபேசி நகரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் படித்து வரும் ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது. 

மேலும், இதைத் தொடர்ந்து கிண்டியில் உள்ள அனைத்து காவல்நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். அப்போது காவல்நிலைய துணை ஆய்வாளர் கலைச்செல்வி புகாரை வாங்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

இதனால் ஆத்திரம் அடைந்த பெற்றோர் பள்ளி முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீசார் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தி புகார் மனுவை ஏற்றுக்கொண்டனர்.