Pages - Menu

Pages - Menu

Menu

சனி, 31 மார்ச், 2018

பதவி விலகாததால் அதிமுக எம்பிக்கு எலி மருந்து அனுப்பிய இளைஞர் March 30, 2018

Image

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படாததால் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரனுக்கு இளைஞர் ஒருவர் எலி மருந்து அனுப்பி உள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால். தற்கொலை கொள்வோம் என அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் மாநிலங்களைவையில் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த நிலையில் மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான கெடு நேற்று முடிவடைந்தது. இதனை அடுத்து  கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த இளைஞர் பெரியார் மணி என்பவர் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர்  மகேந்திரனுக்கு கொரியர் மூலம் எலி மருந்து அனுப்பி உள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.