Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 5 மார்ச், 2018

​இடதுசாரிகளின் பின்னடைவு நாட்டுக்கு பேராபத்து - காங். தலைவர்! March 5, 2018

Image


இடதுசாரிகளுக்கு அரசியல் ரீதியில் ஏற்படும் பின்னடைவு, நாட்டுக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், இந்தியாவில் இடதுசாரிகள் வலிமையான சக்தியாக விளங்க வேண்டியது அவசியம், என குறிப்பிட்டார். அரசியல் ரீதியில் இடதுசாரிகளும், காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிர் நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இடதுசாரிகள் நாட்டிற்கு அவசியமானவர்கள் என்று  ஜெய்ராம் ரமேஷ் கூறினார். திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 25 ஆண்டுகால ஆட்சியை இழந்து, அம்மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், அவர் இக்கருத்தை முன்வைத்துள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.