ஒரே மாதிரியான பிரச்னையில் 2 விதமாக தீர்ப்பு வழங்குகிறது நீதிமன்றம் : நாராயணசாமி April 28, 2018
புதுச்சேரி மாநில சபாநாயகர் உத்தரவில் தலையிடும் நீதிமன்றம், தமிழக சபாநாயகர் அதிகாரத்தில் தலையிட முடியாது எனக் கூறுவது முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியை மத்திய அரசு வேண்டுமென்றே வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.
சபாநாயகர் விவகாரத்தில் ஒரே மாதிரியான பிரச்னையில் நீதிமன்றம் 2 விதமாக தீர்ப்பு வழங்குவதாக நாராயணசாமி குறிப்பிட்டார்.