செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு..! April 22, 2018
ஆந்திராவில் செல்போன் வெடித்து சித்தி உயிரிழந்ததைக் கேட்ட அதிர்ச்சியில், அவரது அக்கா மகனும் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடப்பா மாவட்டம் கலூருபள்ளே தாண்டா கிராமத்தைச் சேர்ந்த சாந்தம்மா, கணவனை இழந்த நிலையில், இரு மகன்களுடன் வாழ்ந்துவந்தார்.
இந்த நிலையில், செல்போனை சார்ஜ் செய்த சாந்தம்மா அதனை திரும்ப எடுக்க முயன்றபோது, செல்போன் வெடித்து உடலில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சாந்தம்மாவின் அக்கா மகனான ஈஸ்வர் நாயக், தனது சித்தி உயிரிழந்ததைக் கேட்டு மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.