Pages - Menu

Pages - Menu

Menu

புதன், 4 ஏப்ரல், 2018

சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் April 4, 2018

Image

தமிழகத்தில் உள்ள உள் மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 

சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் ராஜபாளையத்தில் தலா 2 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.