கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் திடீர் மூடல்! May 3, 2018
ஃபேஸ்புக் வாடிக்கையாளர்களின் தகவல்களை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் மூடப்பட்டது.
லண்டனை தலைமை இடமாக கொண்டு இயங்கி வரும் கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம், தங்கள் அரசியல் வாடிக்கையாளர்களுக்காக பேஸ்புக் பயனாளிகளின் தகவல்களை முறைகேடாக பெற்று, தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், கோடிக்கணக்கான ஃபேஸ்புக் பயனாளிகளின் தகவல்கள் சட்டவிரோதமாக பரிமாறப்பட்டதாக புகார் எழுந்தது. இந்நிலையில், கேம்பிரிட்ஜ் அனாலிடிகா நிறுவனம் தீடீரென மூடப்பட்டது.