Pages - Menu

Pages - Menu

Menu

திங்கள், 11 ஜூன், 2018

ட்ரம்ப் - வடகொரிய அதிபர் கிம் சந்திப்புக்காக ரூ.100 கோடி செலவிடும் சிங்கப்பூர் அரசு..! June 11, 2018

Image


ட்ரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்காக 100 கோடி ரூபாயை செலவிட உள்ளதாக சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.

உலகின் சர்வாதிகார சக்தியாக விளங்கும் அமெரிக்காவின் கடும் எதிர்ப்புகளையும் மீறி பல அணுகுண்டு, ஏவுகணை சோதனைகளை நிகழ்த்தி, அமெரிக்காவிற்கு சிம்மசொப்பனமான சமீபகாலத்தில் உருவெடுத்தவர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன். உலக அரங்கில் வடகொரியாவை தனித்து முன்னிறுத்திய இவரின் வயது 36 தான் என்பது கவனிக்கத்தக்கது.

கிம் ஜாங் உன்-னின் செயல்களால் அமெரிக்கா கடும் கோபத்திற்கு ஆளானதுடன், 3ஆம் உலகப்போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதாக உலக நாடுகள் பதற்றம் அடைந்தது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இருநாட்டின் தலைவர்களும் சந்திந்தித்துக்கொள்ளும் நிகழ்ச்சி சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

நாளை காலை 9 மணிக்கு சிங்கப்பூரின் செண்டோசா தீவில் உள்ள Capella என்ற நட்சத்திர ஹோட்டலில் இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு அரங்கேற உள்ளது. இதற்காக இருநாட்டின் தலைவர்களுமே சிங்கப்பூர் சென்றடைந்துள்ளனர்.

இது தொடர்பாக சிங்கப்பூர் பிரதமர் Lee Hsien Loong கூறும்போது, அமெரிக்கா மற்றும் வடகொரியாவுடன் நெருங்கிய நட்பு பாராட்டும் ஒரு சில நாடுகளுள் முக்கியமானதாக சிங்கப்பூர் கருதப்படுவதாலேயே இங்கு இந்த அதிமுக்கியம் கொண்ட சந்திப்பு நிகழ்ச்சி நடத்த தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

இது சர்வதேச அமைதிக்கு நன்மை பயக்கும் என்பதால், முற்றிலும் எங்கள் சுய விருப்பத்தின் பேரிலே, இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு நடைபெற்று வருவதாகவும், சுமார் 2500 பத்திரிக்கையாளர்கள் இந்நிகழ்வு குறித்து செய்தி சேகரிப்பதற்காக இங்கு வந்துள்ளனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மிகவும் முக்கியமான இந்த சந்திப்பு நிகழ்ச்சிக்காக சுமார் 100 கோடி ரூபாய் செலவாகும் என்றும், அதில் பாதியளவு பாதுகாப்புக்காக மட்டுமே செலவிடப்படும் என்றும் சிங்கப்பூர் பிரதமர் லீ தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக, கடந்த 2015ஆம் ஆண்டில் சீனா மற்றும் தைவான் நாட்டு தலைவர்களுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. 60 ஆண்டுகளில் சீனா மற்றும் தைவான் தலைவர்கள் சந்தித்துக்கொண்டது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.