Pages - Menu
▼
Menu
▼
இடைவிடாமல் பெய்த கன மழையால் நேபாளத்தில் கடுமையான பாதிப்பு July 13, 2018
நேபாளத்தில் கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.நேபாளத்தின் பக்தாபூர் நகரில் நேற்று கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் வெள்ளம் ஆறு போல் பாய்ந்தோடியது.தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளையும் மழைநீர் சூழ்ந்தது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்படைந்துள்ளது.சாலைகளில் தேங்கிய மழைநீரால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழைக்கு இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.