முழுகொள்ளளவை எட்டவுள்ள ஆழியார் அணை; மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பு! July 19, 2018
ஆழியார் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அதன் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை ஆகிய பகுதிகளில் பெய்துவரும் கனமழை காரணமாக பரம்பிக்குளம் ஆழியார் பாசன திட்ட அணைகள் முழு கொள்ளவை எட்டி வருகின்றன. வால்பாறை சோலையார் அணை 160 அடி முழு கொள்ளவை எட்டியுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியார் அணை 111. 5 அடியாக உயர்ந்துள்ளது. இன்று இரவுக்குள் அணை முழு கொள்ளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அணை பாதுகாப்பு கருதி மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்படவுள்ளது. இதன்காரணமாக கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.