கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் காவலை நீட்டித்து உத்தரவு! August 28, 2018
கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் பேராசிரியை நிர்மலாதேவி உள்ளிட்ட 3 பேரின் நீதிமன்ற காவலை வரும் 10ம் தேதிவரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அருப்புக்கோட்டை கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து செல்ல முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் கல்லூரி பேராசிரியர் நிர்மலா தேவி மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் முருகன் மற்றும் கருப்பசாமி மூன்று பேரும் நீதிமன்றமன்ற காவல் முடிந்து இன்று விருதுநகர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதனையடுத்து அவர்களின் நீதிமன்ற காவலை செப்டம்பர் 10ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.