அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி சாலை மறியல்! August 17, 2018
அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் இளைஞர் உயிரிழந்ததாக கூறி, சடலத்துடன் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை சேர்ந்த சலீம், பழைய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்து வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் சலீமுக்கும், ஆட்டோ ஓட்டுநர் நரேஷூக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த நரேஷ் தாக்கியதில், சலீம் படுகாயம் அடைந்தார். வந்தவாசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து செல்லப்பட்ட நிலையில் அங்கு இறந்தார்.
இந்நிலையில் வந்தவாசி மருத்துவமனையில் சலீமுக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி சடலத்துடன் வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்