விபச்சாரத்திற்கு தள்ளப்படும் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள ரோகிங்கியா பெண்கள்! August 27, 2018
மியான்மரில் இருந்து அகதிகளாக வங்கதேசத்தில் தஞ்சமடைந்த ரோஹிங்கியா முஸ்லீம் பெண்கள், கடத்தப்படுவது அதிகரித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
மியான்மரில் கடந்த ஆகஸ்ட் மாதம் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சுமார் 7 லட்சம் மக்கள் வங்கதேசத்திற்கு அகதிகளாக இடம் பெயர்ந்தனர். அங்குள்ள காக்ஸ் பஜார் முகாமில் தங்கவைக்கப்பட்ட ரோகிங்கியா பெண்கள், பெண் குழந்தைகள் உள்ளிட்டோர் விபச்சாரத்துக்குள் தள்ளப்படுவதாக ஐ.நா. வேதனை தெரிவித்துள்ளது.
மேலும் 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆட்கடத்தலுக்கு இலக்காகி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.