19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய பாதுகாப்புப்படை வீரர்கள்! September 20, 2018
19 மணிநேரம் உணவு கிடைக்காமல் தவித்த மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் ஓடும் ரயிலை நிறுத்தி உணவு சமைத்து சாப்பிட்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த திங்கள்கிழமை ஜம்முவில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்புப்படை வீரர்கள் 1500 பேர் ராய்பூருக்கு செல்லும் சிறப்புரயிலில் பயணித்தனர். இந்த சிறப்பு ரயில் சில இடங்களில் மட்டுமே நிற்கும் என்பதால், வீரர்கள் உணவு கிடைக்காமல் தவித்துள்ளனர்.
இதனால் ஃபரிதாபாத் ரயில் நிலையம் நெருங்கியதும் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயில்வே அதிகாரிகளிடம் விவரத்தை சொன்ன வீரர்கள், ரயில் நிலையத்திலேயே உணவு சமைத்து சாப்பிட்டது பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.