கசக்கும் பாகற்காய் இனிக்கும் லாபம் September 19, 2018
ஓமலூர் வட்டார பகுதிகளில் பாகற்காய் விதைத்த விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதால் அவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதிகளில் கடந்த சில ஆண்டிகளாக போதிய மழைப்பெழிவு இல்லாத காரணத்தால் அப்பகுதி விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்தனர்.
இந்நிலையில் இவர்கள் குறைந்த நீர் பாசனத்தில் குறுகிய காலத்தில் விளையக்கூடிய பயிர்களை பயிரிடுவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக இப்பகுதி விவசாயிகள் பாகற்காய்களை பயிரிட்டிருந்தனர்.
தற்போது இதன் விளைச்சல் அதிக லாபத்தை தந்துள்ளதாக பாகற்காயை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.