சூறை காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் சேதம்! September 26, 2018
களக்காடு அருகே திருக்குறுங்குடியில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் சேதம் அடைந்தன.
அங்கு நேற்றிரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. மழையின் போது பயங்கர சூறை காற்றும் வீசியது. இதனால் திருக்குறுங்குடி பெரியகுளம் பத்துக்காடு, மலையடிபுதூர், ராஜபுதூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான வாழைகள் சாய்ந்தன.
இதுபோல 500 ஏக்கர் நெற் பயிர்களும் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.