பெண்ணை ஜீப்பின் மேற்கூரையில் கட்டி கொண்டு சென்ற போலீசார்! September 27, 2018
பஞ்சாபில் பெண்ணை ஜீப்பின் மேற்கூரையில் கட்டி போலீசார் கொண்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் அம்ரித்சர் மாவட்டத்தில் சாவிந்தா தேவி பகுதியை சேர்ந்த ஒருவரை வழக்கு ஒன்றில் கைது செய்ய போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். ஆனால் அதற்கு அவரது மனைவி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த போலீசார், அந்த பெண்ணை, ஜீப்பின் மீது கட்டி வாகனத்தை ஓட்டிச்சென்றனர்.
ஒரு திருப்பத்தில் சென்ற போது ஜீப்பில் இருந்து கீழே விழுந்த பெண் படுகாயம் அடைந்தார். இதையடுத்து, அவரை அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்த சிசிடிவி கேமரா காட்சிகள், வைரலாகி வருகின்றன.