அலுமினியப் பாத்திரங்கள் உதவியுடன் ஆற்றைக் கடக்கும் பள்ளி மாணவர்கள்! September 28, 2018
அசாம் மாநிலத்தில் அலுமினியப் பாத்திரங்கள் உதவியுடன், குழந்தைகள் ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.
பிஸ்வந்த் மாவட்டத்தில் உள்ள நதுவார் பகுதியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளிக்கு ஆற்றை கடந்து செல்ல வேண்டிய நிலையில், பாலம் இல்லாததால் மாணவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். குறிப்பாக அலுமினிய பாத்திரங்களில் மிதந்து சென்று ஆபத்தான முறையில் குழந்தைகள் ஆற்றை கடக்கின்றனர்.
ஆற்றை கடந்து செல்ல உடனடியாக படகு வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளியை வேறு இடத்துக்கு மாற்ற மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்படும் என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்