Pages - Menu

Pages - Menu

Menu

செவ்வாய், 4 செப்டம்பர், 2018

நீதிமன்றங்களின் தீர்ப்பை கூட போராடியே பெற வேண்டிய சூழல் உள்ளது - நீதியரசர் சந்துரு September 3, 2018

Image

நீதிமன்றங்களின் தீர்ப்பை கூட போராட்டங்கள் மூலமே பெறக் கூடிய சூழல் இருப்பதாக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சந்துரு தெரிவித்துள்ளார். 

திருப்பூரில் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் எல்லோருக்கும் பொதுவானதாக இருந்தாலும், அனைத்து துறைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளும், சலுகைகளும் வெவ்வேறாக இருப்பதாக கூறினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு சமவாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில் இதுபோன்ற மாநாடுகள் நடப்பதாக கூறிய அவர், நீதிமன்றங்களின் தீர்ப்பை கூட போராடியே பெற வேண்டிய சூழல் உள்ளது என கூறினார்.